தமிழகத்தில் ஏப்ரல் 19 ஆம் தேதி மக்களவை தேர்தலானது ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சியினர் வேட்பாளர்களை அறிவித்து வருகிறார்கள். இந்நிலையில் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பாஜக பொதுச்செயலாளர் பால கணபதிக்கு திருவள்ளுர் பாஜக வேட்பாளராக போட்டியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சசிகலா புஷ்பா மீது பொதுவெளியில் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு அது தொடர்பான வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வெளியானது. பாலியல் சீண்டல் தொடர்பாக சசிகலா புஷ்பாவின் கணவர் ராமசாமியும் புகார் ஒன்றை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.