ஜக்கி வாசுதேவ் ஆசிரமத்தில் இருந்து 2016ஆம் ஆண்டு முதல் 6 பேர் மாயமாகியுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக காவல்துறை அறிக்கை சமர்ப்பித்துள்ளது. தனது சகோதரர் கணேசனை காணவில்லை என திருமலை என்பவர் தாக்கல் செய்த மனு மீதான இன்றைய விசாரணையின் போது மேலும் 6 பேர் காணாமல் போனது தொடர்பாக காவல்துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். இது குறித்து உயர்நீதிமன்றம், விசாரணையின் சமீபத்திய அறிக்கையை ஏப்ரல் 18-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க காவல்துறைக்கு உத்தரவிட்டது.