தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த நிலையில் பாஜக உடன் கூட்டணி அமைத்துள்ள பாமக நேற்று வேட்பாளர்களை அறிவித்தது. காஞ்சிபுரம் (தனி) தொகுதிக்கான வேட்பாளரை பாமக தனியாக அறிவித்துள்ளது.

மொத்தம் போட்டியிடும் பத்து தொகுதிகளில் ஒன்பது தொகுதிகளை நேற்று காலை பாமக தலைமை அறிவித்தது. அதன் பிறகு மாலையில் தர்மபுரி வேட்பாளர் மாற்றம் செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து இரவில் காஞ்சிபுரம் வேட்பாளராக வெ. ஜோதி வெங்கடேசன் அறிவிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் பாமக வேட்பாளர்கள் அனைவரும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.