பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகிறார்கள். மலைக்கு மேல் உள்ள கோவிலில் பக்தர்கள் வந்து செல்ல ஏதுவாக ரோப் கார் வசதியும் உள்ளது. இந்த நிலையில் மார்ச் 28ஆம் தேதி இன்று ஒரு நாள் பழனியில் ரோப் கார் சேவை ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மாதாந்திர பணி காரணமாக இந்த சேவை இன்று இயக்கப்படாது என்றும் நாளை முதல் வழக்கம் போல ரோப் கார் சேவை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.