பழனி முருகன் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு இன்று (ஜனவரி 27ஆம் தேதி) திண்டுக்கல் மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பழனி கோயில் குடமுழுக்கு நடைபெறுவதால் இன்று திண்டுக்கல் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளித்து தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக  பிப்ரவரி 25ஆம் தேதி பணி நாளாக இருக்கும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.