புதுச்சேரி மாநிலத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக மாணவ மாணவிகளுக்கு இளவரசி சைக்கிள் வழங்கப்படாமல் இருந்தது. இதனைத் தொடர்ந்து ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு உடனடியாக இலவச சைக்கிள் வழங்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்த நிலையில் பல்வேறு கட்ட போராட்டங்களுக்குப் பிறகும் மூன்று வருடங்களாக இலவச சைக்கிள் வழங்கப்படவில்லை.

இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்க வேண்டும் என சட்டசபையில் திமுக சார்பாக கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில் தற்போது அந்த கோரிக்கையை ஏற்று ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்குவதற்கான உத்தரவை அரசு பிறப்பித்துள்ளது.