உத்தர் பிரதேச மாநிலம் ஹமீர்பூர் மாவட்டத்தில் 11 வயது சிறுமி ஒருவர் தனது தம்பியுடன் மதகுரு மௌலானா முந்தசீர் ஆலம் என்பவரின் உருது வகுப்பில் கலந்து கொள்ள பள்ளிவாசல் சென்றுள்ளார். வகுப்பு முடிந்ததும் சிறுமியை காத்திருக்க சொன்ன மதகுரு சிறுமியின் தம்பிக்கு சாக்லேட் கொடுத்து பள்ளிவாசலின் வெளியே அமர்ந்திருக்குமாறு கூறியுள்ளார்.

பின்னர் சிறுமியிடம் வந்தவர் அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து சிறுமி வீட்டிற்கு சென்று தனது குடும்பத்தினரிடம் கூற காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் மதகுரு மௌலானாவை கைது செய்தனர்.