டெல்லியில் இருந்து லண்டன் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் உள்ளே மழை நீர் ஒழுகியதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். ஏர் இந்தியா கோயிங் B787 விமானத்தின் மேல்நிலைப் பகுதியில் இருந்து கேபினுக்குள் மழை நீர் வடிந்துள்ளது. இது தொடர்பான காணொளி எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியான நிலையில் தற்போது வைரல் ஆகியுள்ளது.