குஜராத் மாநிலம் கேதா மாவட்டத்தில் உள்ள பிலோதாரா கிராமத்தில் அமைந்திருக்கும் கடை ஒன்றில் “கல்மெகசாவ் அசாவா அரிஷ்ட” என்ற பெயருடைய ஆயுர்வேத சிரப் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த சிரப்பை குடித்து 5 பேர் உயிரிழந்ததாகவும் இரண்டு பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

அந்த சிரப்பில் மெத்தில் ஆல்கஹால் அதிகம் இருந்தது தான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக சிரப்பை குறித்த ஒருவரது ரத்த மாதிரியே சோதனை செய்தபோது அதில் அதிக அளவு மெத்தில் ஆல்கஹால் கலந்து இருப்பது உறுதியானது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் கடைக்காரர் உட்பட மூன்று பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.