ஜெர்மனியிலிருந்து தாய்லாந்து இருக்கு லூப்தான்சா ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் அந்த விமானத்தில் பயணம் செய்த கணவன் மனைவி இருவரும் திடீரென சண்டையிட தொடங்கியுள்ளனர்.

அவர்களின் சண்டை நேரம் போகப் போக அதிகரித்ததால் விமானத்தை தரையிறக்கி அந்த நபரை பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது. இதனால் பாகிஸ்தான் விமான நிலையத்தில் தரையிறங்க அனுமதி கோறப்பட்டுள்ளது. ஆனால் அங்கு அனுமதி கிடைக்காத நிலையில் டெல்லியில் விமானம் தரையிறக்கப்பட்டு ஆண் பயணி பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து சற்று தாமதமாக தாய்லாந்து நோக்கி விமானம் புறப்பட்டது.