கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டத்தில் உள்ள குண்ட்லுபேட் தாலுக்கா, கரகனஹள்ளியில் உள்ள மொரார்ஜிதேசாய் உயர்நிலைப் பள்ளியில் காரமான உணவை சாப்பிட்ட ஏழு மாணவர்கள் உடல்நலம் கவலைக்கிடமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று காலை தக்காளி சாதம் சாப்பிட்ட மாணவர்களுக்கு வயிற்று வலி, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து அவர்கள் அனைவரும் உடனடியாக உள்ளூர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு மாணவர்கள் தற்போது கவலைக்கிடமாக உள்ள நிலையில் மாணவர்களின் இந்த நிலைமைக்கு மொரார்ஜிதேசாய் உயர்நிலைப்பள்ளி ஊழியர்களின் அலட்சியம் தான் காரணம் என மாணவர்களின் பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.