மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் ஜெய்தேவ். இவருடைய மனைவி சதி. இந்த தம்பதிக்கு ஏழு வயதில் ஒரு மகளும் 8 மாதத்தில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இந்த தம்பதிகள் தங்களுடைய இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோக்களை பதிவிட்டு வந்தார்கள். இந்த நிலையில் தரமான ரீல்ஸ் வீடியோக்களை வெளியிடுவதற்கு உயர்ந்த ஐபோன் வாங்க முடிவு செய்துள்ளனர் ஆனால் அவர்களிடம் போதிய பணம் இல்லாததால் இவர்கள் தங்களுடைய எட்டு மாத ஆண் குழந்தையை விற்று ஐ போன் வாங்க முடிவு எடுத்துள்ளனர். அதன்படி குழந்தையை விற்று புதிய ஐபோனை 70 ஆயிரத்துக்கு வாங்கியுள்ளார்கள்.

இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் குழந்தை எங்கே என்று கேட்டதில் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். குழந்தையை போனுக்காக விற்றதை போலீஸிடம் ஒப்புக்கொண்டனர் l. மேலும் ஐபோன்காகத்தான் குழந்தை விற்கப்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.