மத்திய அரசு மக்கள் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தெருவோர வியாபாரிகளுக்காக பிரதமர் ஸ்வாதி திட்டத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஒன்றாம் தேதி ஸ்வநிதி என்ற கைபேசி செயலி அறிமுகம் செய்யப்பட்டது. இந்த செல்போன் செயலி மூலம் தெருவோரம் வியாபாரிகள் இந்த திட்டத்தின் கீழ் கடன்கள் மற்றும் பரிந்துரை கடிதம் பெற விண்ணப்பிக்கலாம்.

மேலும் வியாபாரிகள் தங்களுடைய சுயநிதி கடன் விண்ணப்பநிலையையும் இந்த செயலியில் சரி பார்க்கலாம். மத்திய அரசு செயல்படுத்தி வரும் இந்த திட்டம் தெருவோரம் வியாபாரிகள் தங்களுடைய வணிகங்களுக்காக பிணையற்ற செயல்பாட்டு மூலதன கடனை எளிதாக பெரும் நோக்கத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் கடன் வழங்குவது 2024 ஆம் வருடம் டிசம்பர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.