கர்நாடக மாநிலம், பெங்களூரில் உள்ள பல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதனால் பயந்துபோன குழந்தைகளின் பெற்றோர்கள் பள்ளியிலிருந்து குழந்தைகளை அழைத்துச் சென்றனர். நகரில் உள்ள 15க்கும் மேற்பட்ட பள்ளிகளின் நிர்வாகக் குழுவின் மின்னஞ்சல் முகவரிக்கு மர்மநபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.

இன்று பள்ளிகள் தொடங்கிய நிலையில், பள்ளி மின்னஞ்சலை பார்த்தபோது வெடிகுண்டு மிரட்டல் செய்தி இருப்பது தெரிந்தது. போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தி வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளிதான் என போலீசார் தெரிவித்தனர்.