நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி மக்களுக்காக எடப்பாடி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் 854.37 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்காக சாலை ஓரங்களில் பிவிசி குடிநீர் குழாய் பதிப்பதற்கு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதன்படி குருசாமிபாளையம் பகுதியில் ஒப்பந்ததாரர் நூற்றுக்கும் மேற்பட்ட குழாய்களை இருப்பு வைத்துள்ளார்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திடீரென குழாய்கள் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு குழாய்களில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள குழாய்கள் எரிந்து நாசமானது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.