புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வார்பட்டு பிச்சங்களை பட்டியில் பெரியாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லோகநாதன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அரசு கல்லூரியில் முதல் நிலை இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் லோகநாதன் பிச்சங்களப்பட்டியில் இருந்து வார்டு பட்டிக்கு விவசாய பணிகளை செய்வதற்காக டிராக்டரை ஓட்டி சென்றுள்ளார்.

அப்போது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் டிராக்டருக்கு அடியில் சிக்கிய லோகநாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று லோகநாதனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.