உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருவதால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு வாட்ஸ்அப் நிறுவனம் தினம் தோறும் புதுவிதமான அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஒரு whatsapp அக்கவுண்ட்டை நான்கு டிவைஸ்களில் லாகின் செய்து பயன்படுத்தும் படியான புதிய அப்டேட் வெளியிடப்பட்டது. இதனால் வாட்ஸப் மிக எளிமையாக ஹேக் செய்யப்படும் என்று பயனர்கள் மத்தியில் அச்சம் எழுந்தது.

இதன் காரணமாக பயனர்களுக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்கும் வகையில் தனிப்பட்ட தகவல்களை பாதுகாப்பதற்காக இமெயில் வெரிஃபிகேஷன் என்றார் புதிய அம்சத்தை whatsapp நிறுவனம் அறிமுகம் செய்தது. அதாவது வாட்ஸ் அப் அக்கவுண்டில் லாகின் செய்வதற்கு உங்களின் ஈமெயில் ஐடிக்கு ஓடிபி அனுப்பப்பட்டதும் அந்த எண்ணை பதிவு செய்தவுடன் வாட்ஸ்அப் அக்கவுண்டில் லாகின் செய்யும்படியாக புதிய அப்டேட் வழங்கப்பட்டுள்ளது. இது போன்ற அம்சங்கள் ஏற்கனவே இன்ஸ்டாகிராம் தளத்தில் வழங்கப்பட்டுள்ள நிலையில் தற்போது வாட்ஸ் அப் பயனர்களுக்கும் இந்த புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.