டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலைக் கண்டு பாஜக அச்சமடைந்து உள்ளதாக பஞ்சாப் முதல்வர் பவந்த் மான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், கெஜ்ரிவால் போன்ற பெரிய தலைவர் பிரச்சாரம் செய்வதை பாஜக விரும்பவில்லை. மக்களவைத் தேர்தலில் கெஜ்ரிவால் பிரசாரம் செய்வதை தடுக்கவே அவரை பாஜக அரசு அவரைக் கைது செய்துள்ளது. அவரைப் பார்த்து பாஜக பயப்படுகிறது. எனவேதான், அவரையும் ஆம் ஆத்மி கட்சியையும் அழிக்க விரும்புகிறார்கள் என்று தெரிவித்தார்.