மக்களவை தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் 3 கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் வாக்காளர்களை குறிவைத்து இணையவழி மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. தேர்தல் கருத்துக்கணிப்புகளில் கலந்துகொண்டால் பரிசுகள் கிடைக்கும் என பொதுமக்களின் மொபைலுக்கு லிங்க்குகள் அனுப்பப்படுகின்றன.

இவற்றை கிளிக் செய்தால் உங்கள் தனிப்பட்ட விவரங்கள், வங்கி கணக்கில் இருந்து பணம் திருடப்பட வாய்ப்புள்ளது. எனவே இது போன்ற செய்திகளை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.