தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முத்தையாபுரம் தங்கமணி நகரில் கூலி வேலை பார்க்கும் பட்டு ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் பட்டு ராஜா பக்கத்து வீட்டில் வசிக்கும் சுடலைமணி என்பவரிடம் ஐந்தாயிரம் ரூபாய் பணத்தை கடனாக வாங்கினார். அதில் நான்காயிரம் ரூபாய் பணத்தை திரும்ப கொடுத்தார். மீதமுள்ள ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுக்கவில்லை. இதனை கேட்பதற்காக சுடலைமணி பட்டு ராஜாவின் வீட்டிற்கு சென்றார். அங்கு அவர் இல்லாததால் மாரியம்மாவிடம் பணத்தை கேட்டுள்ளார்.

இதனை அறிந்த சுடலைமணியின் மனைவி தனது கணவர் மீது சந்தேகப்பட்டு மாரியம்மாளின் வீட்டிற்கு சென்றார். பின்னர் அங்கு பேசிக்கொண்டிருந்த சுடலை மணியையும் மாரியம்மாளையும் கிருஷ்ணமாள், அவரது தாய், தம்பி, உறவினர்கள் ஆகியோர் தாக்கினர். இதனால் காயமடைந்த மாரியம்மாள், சுடலைமணி ஆகிய இருவரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் கிருஷ்ணமாளை கைது செய்தனர்.