தென்காசி மாவட்டத்தில் உள்ள குருக்கள்பட்டியில் நம்பிராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு நம்பிராஜனுக்கு திவ்யா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. நேற்று முன்தினம் சண்முகநல்லூர் கோவில் அருகே பழுதாகி நின்ற அரசு பேருந்து மீது நம்பிராஜன் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த நம்பிராஜன் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் நம்பிராஜனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்ய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.