விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அகமது நகர் மூன்றாவது தெருவில் மீரா உசேன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு ஹோட்டலில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் உசேன் தனது மகனின் திருமண செலவுக்காக தனது மனைவி மும்தாஜிடம் கொடுத்த பணத்தை திரும்பி கேட்டார். அப்போது உசேனுக்கும் அவரது மகன் ஆஷிக் உமருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கோபத்தில் உசேன் அப்பகுதியில் இருக்கும் தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். பின்னர் அங்கு சென்று தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.