விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோபாலபுரத்தில் அந்தோணி ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது சொந்தமான காரை வ.உ.சி நகரில் நிறுத்தி வைத்துள்ளார் அந்த பகுதியில் காய்ந்த புற்கள் இருக்கிறது. இந்நிலையில் அடையாளம் தெரியாத நபர்கள் அந்த புற்களுக்கு தீ வைத்தனர். அந்த தீ கார் மீதும் வேகமாக பரவி தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.

இதனை பார்த்த பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் காரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் இந்த தீ விபத்தில் காரின் பின் பகுதி எரிந்து நாசமானது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.