அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவான புஷ்பா திரைப்படத்தில் வில்லன் சுனிலின் மனைவியாக நடித்தவர் அனுசுயா பரத்வாஜ். இவர்  சின்னத்திரையில் தொகுப்பாளினியாக இருந்து பின்பு திரைப்படங்களில் நடிகையாக வளம் வருகின்றார். இந்நிலையில் தனது கணவருடன் காதலர் தினத்தன்று எடுத்த புகைப்படத்தினை இவர் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த நெடிஷன்கள் பலர் விமர்சனங்களை வெளியிட்டுள்ளனர். அதிலும் குறிப்பாக ஒரு நொடிசன் இவரிடம் நீங்கள் பணத்திற்காக தானே இவரை திருமணம் செய்து கொண்டீர்கள்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு கடுப்பான அனுசுயா பணம் அவரிடம் மட்டும்தான் இருக்கிறதா? என்னிடம் இல்லையா? இதை நீ சொன்னதற்காக கன்னத்தில் போட்டுக் கொள் இல்லை என்றால் உன் கன்னத்தில் செருப்பால் அடிப்பேன் என எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் காமாலை உள்ளவன் கண்ணுக்கு உலகமே மஞ்சளாகத்தான் தெரியும். பணம் மட்டுமே புத்தியை கொண்டவர்களுக்கு எல்லாமே தவறாகத்தான் தெரியும். அதனால்  தயவுசெய்து மாற்றிக்கொள்ளுங்கள் என பதிலடி கொடுத்துள்ளார். தற்போது இந்த பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.