தமிழ், தெலுங்கு என இரண்டிலும் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் சமந்தா. இவர் சென்ற 2021 ஆம் வருடம் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஸ்மிகா மந்தானா நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படத்தில் ஊ சொல்றியா மாமா என்ற பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருந்தார். அவரின் அந்த குத்தாட்ட பாடல் பட்டி தொட்டி எல்லாம் ரீச் ஆனது. இந்த நிலையில் தற்போது புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகின்றது.

இதனால் இரண்டாம் பாகத்திலும் சமந்தாவை குத்தாட்டம் போட வைத்தால் நன்றாக இருக்கும் என எண்ணிய இயக்குனர் சமந்தாவை அணுகி குத்தாட்டம் போட வேண்டும் என கேட்டு இருக்கின்றார். ஆனால் சமந்தா தற்போது நான் குத்தாட்ட பாடலுக்கு நடனமாட விரும்பவில்லை என மறுத்து இருக்கின்றார். இதனால் இயக்குனர் சுகுமார் பாடல் மட்டும் இல்லை உங்களுக்காக ஒரு கதாபாத்திரத்தை வேண்டுமானாலும் உருவாக்குகின்றோம் என கேட்டு இருக்கின்றார்.

நீங்கள் என்ன சொன்னாலும் சரி நான் குத்தாட்டம் போடுவதாக இல்லை என மறுத்து இருக்கின்றார் சமந்தா. முன்னதாக பாடலுக்கு நடனமாட திஷா பதானியை கேட்டு இருக்கின்றார்கள். ஆனால் அவர் மறுத்ததால் தற்போது குத்தாட்ட பாடலுக்கு நடனமாட சமந்தாவிடம் அணுகியுள்ளனர். ஆனால் சமந்தாவும் மறுத்திருக்கின்றார் குறிப்பிடத்தக்கது.