உலகம் முழுவதும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வாட்ஸ் அப்  பயன்படுத்தி வருகிறார்கள். இதற்கிடையில் whatsapp பல அப்டேட்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிலையில் வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பும் வசதியை இந்தியாவில் வாட்ஸ்அப் விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமூகவலைதள செயலியான வாட்ஸ்அப்பை, கோடிகணக்கானார் பயன்படுத்தி வருகின்றனர். அந்நிறுவனம் தற்போது இந்தியாவுக்குள் பணம் அனுப்புதல் வசதியை அளித்து வருகிறது. இந்நிலையில் வாட்ஸ்அப், வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பும் வசதியை உருவாக்கி வருவதாக தெரிவித்துள்ளது.