அசாமில் உள்ள யுபிபிஎல் கட்சியின் முக்கிய நிர்வாகியான பெஞ்சமின் பசுமத்தாரி, ரூபாய் நோட்டுகளின் மீது படுத்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பி.டி.ஆரின் பிரமோத் போரோ தலைமையிலான யுபிபிஎல் கட்சி, வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. தேர்தல் விதிகள் அமலில் உள்ள இந்த நேரத்தில், பாஜக கூட்டணி நிர்வாகியின் புகைப்படம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது