விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள செங்கமலப்பட்டியில் பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது. இங்கு இன்று(மே 9) வெடி விபத்து ஏற்பட்டது. இதில், ஆலையில் வேலை பார்த்து வந்த தொழிலாளர்கள் 7 பேர் உயிரிழந்தனர். மேலும், படுகாயங்களுடன் மருத்துவமனையில் பலர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உராய்வு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு கீழ்கண்ட யோசனைகள் மூலம் தீர்வு காணலாம்.

*ஆலைக்கு அனுமதி வழங்கும் முன்பு, உற்பத்தி விதிகள் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா என சோதிக்க வேண்டும் விரிவான இட வசதியை உறுதிப்படுத்த வேண்டும் *பெண்கள், வயதானோர் பணிபுரிய கட்டுப்பாடு விதிக்க வேண்டும் *ஆலை இருக்கும் பகுதிகளில் மீட்பு வண்டிகள், ஆம்புலன்ஸ்கள் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்