தமிழகத்தில் வேகத்தடை அருகில் உள்ள மின்கம்பங்களை உடனடியாக அகற்றி வேறு இடங்களில் நட தமிழ்நாடு மின்சார வாரியம் ஆணையிட்டுள்ளது. சிட்லபாக்கம் மற்றும் மணலியில் வேகத்தடை மீது ஏறிய பைக்குகள் நிலை தடுமாறி மின்கம்பங்கள் மீது மோதி மூன்று பேர் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து வேகத்தடை அருகில் உள்ள மின்கம்பங்களை அகற்ற தலைமைச் செயலாளர் உத்தரவிட்ட நிலையில் அனைத்து அதிகாரிகளுக்கும் மின்வாரியம் ஆணையிட்டுள்ளது.