மத்திய பிரதேஷ் மாநிலம் போபாலில், சங்கிலி பறிப்பு சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. நேற்று மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு திருடர்கள் ஒரு பெண்ணின் கழுத்தில் இருந்த தாலிச் சங்கிலியை பறித்துச் சென்றனர். இந்த சம்பவம் அர்ஜுன் நகரில், ஆயோத்யா நகர் காவல் நிலையத்தின் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நடந்ததாக கூறப்படுகிறது.
இந்த குற்றச் சம்பவம் முழுவதும் சிசிடிவி கேமராவில் பதிவாகி, சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. வீடியோவில், ஒரு பெண்ணும் ஒரு சிறுமியும் தெருவில் நடந்து செல்கின்றனர். அப்போது, எதிர் திசையில் இருந்து இரு திருடர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து, பெண்ணின் தாலிச் சங்கிலியை பறித்து விட்டு தப்பி ஓடுகின்றனர். பெண் கூச்சலிட்டு உதவி கேட்டாலும், மக்கள் கூடுவதற்குள் திருடர்கள் தப்பிவிட்டனர். காவல்துறை இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து, குற்றவாளிகளை கண்டுபிடிக்க விசாரணையை தொடங்கியுள்ளது.
