விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே ஜமீன்கொல்லங் கொண்டான் தெற்கு தெரு பகுதியைச் சேர்ந்த வெள்ளத்துரை மனைவி ஜமுனா. இவருடைய மகள் 14 வயது சிறுமி தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். தன்னுடைய மகளை படிக்க சொல்லி தாயார் கண்டித்ததால் மன வருத்தத்தில் இருந்த நிலையில் வீட்டில் திடீரென சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பின்னர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற சிறுமியை மருத்துவர் பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இந்த சம்பவம் குறித்து சேத்தூர் ஊரக காவல் நிலையத்தில் தந்தை வெள்ளைத்துரை கொடுத்த புகார் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்தனர். எந்தவொரு பிரச்சினைக்கும் தற்கொலை ஓர் தீர்வாகாது.