12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்த மாணவர்கள், உயர்க்கல்வி படிக்க ஏதுவாக தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ், தமிழக அரசு மாதந்தோறும் ₹1000 வழங்கி வருகிறது. இந்த நிலையில், +2 தேர்வில் தேர்ச்சிப் பெற்று உயர்கல்வி சேர விரும்பும் மாணவர்கள் இந்தத் திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம். கல்லூரிகளில் சேர்ந்தப் பிறகு மாணவர்கள் அதற்கான ஆவணங்களை சமர்ப்பித்து மாதம் ₹1000 உதவித் தொகை பெறலாம்.

இலவச கட்டாயக் கல்வி திட்டத்தின் (RTE) கீழ் மூலமாக 6-ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை தமிழக தனியார் பள்ளியில் பயின்ற மாணவிகள், 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்றாலும் புதுமைப் பெண் திட்டத்தில் மாதம் தோறும் 1000 ரூபாய் பெறுகின்றனர். எனவே தமிழ் புதல்வன் திட்டத்திலும் அந்த நடைமுறை பின்பற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டமானது வரும் ஜூலை மாதம் செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.