10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் திண்டுக்கல் மாவட்டம் கொசவபட்டி அக்ஷ்யா பள்ளியை சேர்ந்த காவியா ஸ்ரீ என்ற மாணவி 500க்கு 499 மதிப்பெண் எடுத்து அசத்தியுள்ளார். ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆகிய நான்கு பாடங்களில் 100க்கு 100 மதிப்பெண், தமிழில் மட்டும் 99 மதிப்பெண் எடுத்துள்ளார். அதனைப் போல நுங்கம்பாக்கம் மாநகராட்சி பள்ளியை சேர்ந்த சாதனா என்ற மாணவி 500க்கு 492 மதிப்பெண் எடுத்துள்ளார்.