10 ஆம் வகுப்பில் தோல்வி அடைந்தவர்களுக்கு துணைத்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. தோல்வியை கண்டு துவண்டு விடாமல் விடாமுயற்சி செய்தால் வெற்றி பெற முடியும். எனவே தோல்வி அடைந்த மாணவர்களுக்கு ஜூலை இரண்டாம் தேதி முதல் துணைத்தேர்வு நடைபெறுகிறது. இதற்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் வருகின்ற மே 13ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. இதில் தோல்வி அடைந்த மாணவர்கள் பங்கேற்க வேண்டும் என அரசு சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.