My V3 Ads என்ற நிறுவனத்தின் சக்தி ஆனந்தன் மற்றும் பிற உரிமையாளர்கள் மீது கோவை மாநகர குற்ற பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சத்தி ஆனந்தன் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் தன்மை காரணமாக தற்போது வழக்கு பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் குற்ற நடவடிக்கை எடுக்கப்பட்ட மற்றும் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள நிறுவனத்தில் முதலீடு செய்ய வேண்டாம் எனவும் அது சட்டவிரோதமானது மோசடியானது என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.