ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் ஹைதராபாத் மற்றும் லக்னோ அணிகள் மோதியது. இந்த போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னோவை வீழ்த்தி ஹைதராபாத் வெற்றி பெற்றது. இந்தப் போட்டி முடிவடைந்த பிறகு லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சய் கோயங்கா மைதானத்திலேயே கேப்டன் கே.எல் ராகுலிடம் கடும் விவாதத்தில் ஈடுபட்டார்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தால் மனமுடைந்த கே.எல் ராகுல் கேப்டன் பதவியிலிருந்து விலக முடிவு செய்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு பதிலாக நடப்பு சீசனில் அடுத்து வரும் 2 போட்டிகளிலும் நிக்கோலஸ் பூரன் கேப்டனாக செயல்படுவார் என்று கூறப்படுகிறது. மேலும் இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.