பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்த பஞ்சாப் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியது. பஞ்சாப் அணிக்கு இன்னும் இரண்டு போட்டிகள் உள்ள நிலையில் அந்த போட்டிகளில் வெற்றி பெற்றாலும் பிளே ஆப் சுற்றுக்கு செல்ல வாய்ப்பில்லை. முதல் அணியாக மும்பை எலிமினேட் ஆன நிலையில் தற்போது பஞ்சாப் எலிமினேட் ஆகியுள்ளது. இன்று சிஎஸ்கேக்கு எதிரான போட்டியில் தோற்கும் பட்சத்தில் குஜராத் அணியும் வெளியேறும்.