சீனாவில் உள்ள குவாங்டங் மாகாணத்தை சேர்ந்தவர்கள் டெங் – சென் தம்பதி. இவர்கள் திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்த இருவருக்கும் சமீபத்தில் குழந்தை பிறந்து சிறிது நாட்களிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டு சென் பிரிந்து சென்று விட்டார். குழந்தை தந்தை டெங்கிடம் இருந்தது.

இந்நிலையில் பச்சிளம் குழந்தையை 30 முறை பளார்  பளார் என அறைந்து அதனை காணொளியாக பதிவு செய்து தனது காதலிக்கு அனுப்பியுள்ளார் டெங்.  இந்த காணொளியில் குழந்தை வீறிட்டு அழுவது பார்ப்பவரை பதற செய்துள்ளது. இது சமூக வலைதளத்தில் வெளியாகி பலரது கோபத்தை தூண்டி உள்ளது. பிரிந்து சென்ற சென் திரும்பி வருவார் என்று டெங் இவ்வாறு செய்ததாக கூறப்படுகிறது.