உத்தரப் பிரதேசத்தில் ஒரு கும்பல் ஆயுதங்களைச் சுற்றி நின்றுகொண்டு வகுப்புவாத வெறுப்பைத் தூண்டும் வகையில் பேசும் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் பேசும் நபர், ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று முழக்கமிட்டுத் தொடங்கி, வங்கதேசத்தில் நடக்கும் நிகழ்வுகளைக் குறிப்பிட்டுப் பேசுகிறார். ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை எச்சரிக்கும் விதமாகப் பேசும் அவர், தங்களது குடும்பத்தினரையோ அல்லது பெண்களையோ யாராவது தொந்தரவு செய்ய முயன்றால் அவர்களுக்குத் தக்க பாடம் கற்பிக்கப்படும் என்று ஆவேசமாகத் தெரிவிக்கிறார்.
Who is this jobless goon? @Uppolice please do your job and arrest these communal goons.
I'm shocked to see the audacity of creating this video with such hate and so many swords. pic.twitter.com/FAtpEJrFdc— Rakhi Tripathi (@rakhitripathi) December 29, 2025
மேலும், இந்துக்கள் அனைவரும் ஆயுதங்களை ஏந்த வேண்டும் என்றும், இதற்காக ‘இந்து ரட்சா தள்’ அமைப்பு தயாராக இருப்பதாகவும் அவர் அந்தக் காணொளியில் கூறுகிறார். இந்தியாவில் வாழ வேண்டுமானால் குறிப்பிட்ட கலாசாரத்தின்படிதான் வாழ வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கும் இந்த வீடியோ, மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய வெறுப்புப் பேச்சுகளில் ஈடுபடும் நபர்கள் மீது காவல்துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
