இங்கிலாந்தில் சிரிக்கும் வாயுவை நீண்ட காலமாக பயன்படுத்தி வந்த மெர்சர் என்ற 24 வயது கர்ப்பிணி தீவிர சிகிச்சைக்கு பிறகு உயிரிழந்தார். சிரிக்கும் வாயு என அழைக்கப்படும் நைட்ரஸ் ஆக்ஸைடு வாயுவை அவர் நாளொன்றுக்கு இரண்டு முதல் மூன்று முறை பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

ஆறு மாத கர்ப்பிணியான இவர் நைட்ரஸ் ஆக்சைடு பயன்பாடு காரணமாக நுரையீரல் ரத்த உறைவு பிரச்சனையால் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதேசமயம் இந்த வாயுவை இனி பயன்படுத்தியபோது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.