இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு மோசடி சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகின்றன. அதன்படி மின் கட்டணம் செலுத்தாவிட்டால் இணைப்பு துண்டிக்கப்படும் என்று வாட்ஸ் அப்பில் அனுப்பப்படும் ஒரு லிங்கை கிளிக் செய்ய வேண்டாம் என்று சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

வாட்ஸ் அப்பில் வரும் லிங்கை கிளிக் செய்யவோ அல்லது அதில் குறிப்பிடப்பட்டுள்ள செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொள்ளவோ வேண்டாம். லிங்கை கிளிக் செய்தால் உடனே உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து பணம் திருடப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. உலகையே உள்ளங்கையில் கொண்டு வரும் மொபைல் தொழில்நுட்பம் நமக்கு பலவகையில் பயனாக அமைந்தாலும் சில நேரங்களில் இழப்புகளை ஏற்படுத்துவது குறிப்பிடத்தக்கது.