லிப்டில் சிக்கிக்கொண்ட சிறுவன் ஒருவன் 3 மணி நேரமாக எந்த பயமும் இல்லாமல் தன்னுடைய வீட்டு பாடங்களை எழுதி முடித்த சம்பவம் பலரையும் வியக்க வைத்துள்ளது. அரியானா மாநிலம் பரிதாபத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சிறுவன் லிப்டில் செல்லும் போது திடீரென தொழில்நுட்பக் கோளாறு காரணமாக லிப்ட் நின்று விட்டதால் சிறுவன் மாட்டிக் கொண்டான். சுமார்3  மணி நேரத்திற்கு பிறகு சிறுவன் மீட்கப்பட்டுள்ளார்.

ஆனால் எந்தவித பயமும் இல்லாமல் அந்த சிறுவன் தன்னுடைய வீட்டுப் பாடங்களை எழுதி முடித்துள்ளான். இந்த சிறுவனின் செயல் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இதனை பார்த்த நெட்டிசல்கள் பலரும் நீ ஒரு படிபாளின்னு நிருபிச்சிட்ட என கூறி வருகிறார்கள்.