உலக வரலாற்றில் இந்தியாவுக்கு இன்று மிக முக்கியமான நாள். ஒன்று சந்திரயான்-3 திட்டம், மற்றொன்று உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் பிரக்ஞானந்தா. இதில், மாலை 4.30 மணிக்கு செஸ் போட்டியும், மாலை 6.04க்கு விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் அரிய நிகழ்வும் நடைபெற உள்ளது.  செஸ் உலக கோப்பைக்கான இறுதிப்போட்டி இன்று மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது. முதல் சுற்றில் பிரக்ஞானந்தா-மேக்னஸ் கார்ல்சன் இடையிலான ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. இன்று 2வது சுற்று என்பதால், ரசிகர்கள் பெரும் ஆர்வத்தில் உள்ளனர்.

இன்றைய போட்டியும் டிராவில் முடிந்தால், நாளை 2 ரேபிட் சுற்றுகள் நடைபெறும். பிரக்ஞானந்தாவின் வெற்றியை ஒட்டுமொத்த இந்தியாவும் எதிர்பார்த்து காத்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரு நிகழ்வுகளின் வெற்றி, உலக அரங்கில் இந்தியாவை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச்செல்லும் என கூறினால் அது மிகையாகாது.