மும்பையில் இருந்து ஏர் இந்தியா விமானம் ஒன்று பயணிகளுடன் அமெரிக்காவின் நியூயார்க் நோக்கி புறப்பட்டது. நடு வானில் விமானம் சென்று கொண்டிருந்தபோது திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது.

இதனைப் புரிந்து கொண்ட விமானி மீண்டும் அவசர அவசரமாக மும்பை விமான நிலையத்திலேயே பாதுகாப்பாக தரை இறக்கினார். இதனால் மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. இதனால் மாற்று விமானம் மூலமாக பயணிகள் நியூயார்க்குக்கு பறந்தனர்.