கார்த்திகை மாதத்தில் மாலை போட்டு ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு செல்வது வாடிக்கையாகும். இந்நிலையில் சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு மத்திய அரசு மகிழ்ச்சியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் விமானத்தில் இருமுடி எடுத்து செல்ல மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

ஜனவரி 15ம் தேதி வரை விமானத்தில் தேங்காயுடன் இருமுடி கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முறையான பாதுகாப்பு சோதனைகளுக்கு பின் எடுத்து செல்லலாம் என பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.