அயோத்தியாவில் புதிதாக கட்டப்பட்ட ராமர் கோவிலுக்கு அர்ச்சகர்கள் தேவை என விளம்பரம் கொடுத்ததை தொடர்ந்து 3000 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் தகுதியின் அடிப்படையில் 200 பேர் நேர்காணலுக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நேர்காணலானது விஷ்வ ஹிந்து பரிசாத் தலைமையகத்தில் வைத்து நடைபெறும் என்றும் இவர்களில் 20 பேர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு ஆறு மாதம் பயிற்சி அளிக்கப்பட்டு அதன் பிறகு அந்தந்த பொறுப்பில் அமர்த்தப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.