சேலம் மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு ஆத்தூர் மாவட்டம் தனியாக உதயமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான அறிவிப்பு நாளை மறுநாள் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சேலம், எடப்பாடி, மேட்டூர், ஓமலூர், சங்ககிரி ஆகிய ஐந்து தாலுகாக்களுடன் சேலம் மாவட்டமும், ஆத்தூர், வாழப்பாடி, ஏற்காடு, கங்கவள்ளி ஆகிய ஐந்து தாலுகாக்களுடன் ஆத்தூர் மாவட்டமாகவும் பிரிக்கப்பட உள்ளன.