வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் இலங்கை திரிகோணமலையிலிருந்து கிழக்கு – தென்கிழக்கு சுமார் 340 கிலோமீட்டர் தொலைவிலும் காரைக்காலில் இருந்து கிழக்கு – தென்கிழக்கு சுமார் 560 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை வரை மேற்கு – வட மேற்கு திசையிலும் அதன் பின் மேற்கு – தென்மேற்கு திசையிலும் நகர்ந்து நாளை காலை இலங்கை கடற்கரை பகுதிகளை கடக்கக்கூடும்.

இதன் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில்  உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் 31.1.2023 அன்று இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் மயிலாடுதுறை புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.  அதேபோல் தென் கடலோர மாவட்டங்கள் காரைக்கால், புதுச்சேரி பகுதிகளில் அனேக இடங்களிலும் உள் தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் வருகிற 1.2.2023 அன்று இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.

சிவகங்கை, புதுக்கோட்டை, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தஞ்சாவூர், கன்னியாகுமரி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல் வருகிற 1.2.2023 அன்று தென் தமிழக மாவட்டங்களில் அநேக இடங்களிலும் வட தமிழக மாவட்டங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன்  கூடிய லேசானது மழை பெய்யக்கூடும். தூத்துக்குடி தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.