மக்களவை தேர்தலில் பாமகவுக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல், நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னத்திற்கு பதில் ஆட்டோ ரிக்ஷா சின்னம் கிடைக்கலாம் என கூறப்பட்டு வந்த நிலையில், அச்சின்னம் நாடாளும் மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இச்சின்னமும் தற்போது கிடைக்காததால், வேறு எந்த சின்னத்தை தேர்தல் ஆணையத்திடம் கேட்பது என்பது குறித்து நாதக ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது.

நாம் தமிழர் கட்சிக்கு கொடுக்கப்பட்டிருந்த ‘கரும்பு விவசாயி’ சின்னம் சமீபத்தில் மற்றொரு கட்சிக்கு ஒதுக்கப்பட்டது அக்கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை உருவாக்கியது. இதுகுறித்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. உச்ச நீதி மன்றத்தில் தொடரப்பட்டமேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கில், விசாரணை தள்ளிவைக்கப்பட்டது. நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் கிடைக்காத பட்சத்தில் அக்கட்சி தேர்தல் ஆணையத்திடம் ஆட்டோ சின்னத்தை வழங்க கோரிக்கை வைத்த தாக கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.