மக்களவைத் தேர்தலில் பாஜக பாமக இடையே கூட்டணி ஒப்பந்தம் இன்று கையெழுத்தான நிலையில், சேலம் பாஜக பொதுக்கூட்டத்தில் ராமதாஸ், அன்புமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து,  பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், மோடிக்கும் பாஜகவுக்கும் கிடைக்கும் மக்கள் ஆதரவை பார்த்து திமுகவின் தூக்கமே தொலைந்து போய்விட்டது என்றார்.

இந்த கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், பாமக நிறுவனர் ராமதாஸ், ஜஜேகே நிறுவனர் பாரிவேந்தர், புதிய நீதி கட்சி தலைவர் ஏசி சண்முகம், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், நடிகர் சரத்குமார், ஜான் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.